<$BlogRSDUrl$>

Monday, March 15, 2004

முக்கிய அறிவிப்பு 

தமிழ் வட்டத்தை கொஞ்சம் சுற்றி வந்ததில் கொஞ்சமில்லை நிறையவே பயமாக இருக்கிறது. சுப்பன் சொன்னது சப்புனு இருக்கு, குப்பன் எழுதுவது குப்பைங்கிற ரேஞ்சுக்கு நிறைய இடத்தில் அடிதடி. சில இடத்தில் அவார்டு படம் பார்க்கிற மாதிரி என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை ஆனால் அங்கே வெட்டு குத்துனு ரத்தம் சொட்டுதுனு மட்டும் தெரியுது.
(எங்கே என்ன பார்த்தேனு கேக்காதீங்க கண்டிப்பா சொல்ல மாட்டேன்)

ஆகையால் என் மண்டையை யாரவது பொளக்கறதுக்கு முன்னாடி

பெருமதிப்புற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, குழைந்தைகளே, இலக்கியவாதிகளே,
நான் எதோ தெரியாம இத ஆரம்பித்துவிட்டேன். இலக்கியம்ங்கற வார்த்தைக்கும் இந்த பக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலக்கணம் வாத்தியார் சொல்லி குடுத்த போது பராக்க பார்த்த பார்டி நான். நேர்மா,நிறைமா, புளிமா எல்லாம் சொல்லும் போது தோசைமாவை நினைத்து ஏங்கிக் கனவு கண்டுகொண்டிருந்ததால் மண்டையில் ஏறவில்லை. எனக்கு இலக்கணம் எல்லாம் இந்த லட்சணம் தான்.சுத்த தமிழும் ரொம்ப வரல ஆனா முயற்சி பண்ணறேன். எங்கேயாவது தவறு இருந்தால் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க. இல்ல அடிக்கனும்னு முடிவு பண்ணிடீங்கனா எல்லார் முன்னாடியும் மானத்த வாங்காம தனியா கூப்பிட்டு மரியாதை செஞ்சீங்கன்னா சத்தம் போடாம வாங்கிக்கறேன்.

நீங்க யாரும் கஷ்டப்ப்ட வேண்டாம், நானே சொல்லிடறேன் - நான் எழுதுவது எல்லாம் குப்பை குப்பையை தவிர வேறொன்றும் இல்லை. அம்புட்டுத்தேன் .

இப்படிக்கு
ஒன்னுமே தெரியாத டுபுக்கு.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?