<$BlogRSDUrl$>

Sunday, May 09, 2004

விளம்பர இடைவேளை!! 

கொஞ்சம் உப்பு, ரெண்டு மூனு மிளகாய் பழம், ஒரு கத்தை வேப்பிலை, காலடி மண் ஒரு பிடிச்சு இதெயெல்லாம் ஒரு பக்காவில் போட்டு கடிகார சுற்றில் மூன்று தடவை, எதிர் சுற்றில் மூன்று தடவை, பிறகு ஒரு துப்பு துப்பவேண்டும் - உட்கார வைத்து இதெல்லாம் திருஷ்டி கழிக்க எங்கள் வீட்டில் செய்வார்கள். இந்த வலைப்பதிவிற்கும்(ப்ளாக்) இதைத் தான் செய்யவேண்டும் போல. யாரோ ரொம்ப திருஷ்டி பட்டுவிட்டார்கள். ஒழுங்காக இங்கே எழுதிக் கொண்டிருந்தவன் ரெண்டு வாரமாக நிறைய லீவு போட்டுவிட்டேன். இதெல்லாம் போறாதென்று இந்த வாரமும் இங்கே எழுத முடியாதென்று நினைக்கிறேன். ஆனால் இந்த வாரம் ஒரு நல்ல விஷயத்திற்காக. வலைப்பூவில் ஒரு வாரம் ஆசிரியர் பணி.வலைப்பூ பற்றி ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால் தமிழ் வலைப்பதிவாளர்களால் வாரம் ஒருவர் என்று நடத்தப்படும் வலைப்பதிவு. இந்த வாரம் என்னை அங்கு எழுத அழைத்திருக்கிறார்கள். அதனால் அங்கு எழுதப் போகிறேன். ஆனால் அங்கே ஓ.பி. அடிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவாவது போட வேண்டும்.

மீண்டும் அடுத்த வாரத்திலேர்ந்து இங்கே தொடர்வேன். அது வரை உங்களை அன்புடன் அங்கே அழைக்கிறேன்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?