Thursday, June 09, 2005
ஏன் என்ற கேள்வி...
டி.வி. மற்றும் சினிமா பார்க்கும் போது எனக்கு நிறைய சந்தேகங்கள் வருகின்றன...எனக்கு மட்டும் தானா இல்லை இத மாதிரி உங்களுக்கும் வருமா?
1.பெரும்பாலான டி.வி.களில் செய்திகள் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் முடிந்த பிறகும் பின்ணனி இசையின் போது செய்தி வாசிப்பவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்களே...என்ன பேசிக் கொள்வார்கள்? (உங்க வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்னா? இல்ல மெட்டி ஒலி பார்த்தீங்களான்னா?)
2.சமைத்துப் பார் போன்ற டி.வி சமையல் நிகழ்ச்சிகளில் செய்த பதார்த்தங்களை என்ன செய்வார்கள்? குழம்பு அல்லது சைட் டிஷ் செய்தால் அதற்கு மெயின் டிஷ் செய்து சாப்பிடுவார்களா? இல்லை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு பொவார்களா? நிகழ்ச்சி தயாரிப்பாளர் மட்டும் எடுத்துக்கொண்டு போவாரா இல்லை முறை வைத்து எடுத்துகொண்டு போவார்களா?
3.முதல் சந்தேகத்தைப் போலவே தான். சினிமாக்களில் சில பாட்டுக்கு தையா தக்கா என்று ஆடாமல் நாயகியும் நாயகனும் பேசிக் கொண்டே கொஞ்சுவார்கள். (வளையோசை (சத்யா), போற்றிப் பாடடி பெண்ணே..) இதுக்கு வசனம் தருவார்களா...இல்ல அங்கேயும் சொந்த்க் கதை சோகக் கதை தானா?
4. மூக்குப் பொடி டப்பா கூட வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சின்னதான ஹேன்ட் பேக் வைத்துக் கொள்கிறார்களே சில பெண்கள்...இது சும்மா ஸ்டைலுக்குத் தானா இல்லை அதில் நிஜமாகவே எதாவது எடுத்துப் போவார்களா?
5.அதென்ன எல்லா விளம்பரங்களிலும் ஆண்களே பெண்களுக்கு கிஃப்ட் குடுக்கிறார்கள்? நிஜ வாழ்வில் பெண்கள் குடுப்பதில்லையா?
6.விக்கோ வஜுர்தந்தி பேஸ்ட் விளம்பரப் பாட்டை எப்போது மாற்றுவார்கள்?
7.சினிமாவில் சில காட்சிகளில் நாயகன் நூறு ரூபாய் நோட்டையெல்லாம் பிச்சையாக போடுவார். அதையெல்லாம் காட்சி முடிந்ததும் திரும்ப வாங்கிக்கொள்வார்களா இல்லை அது அவர்களுக்கே தானா?
8. சினிமாவில்/டி.வியில் சாப்பாடுகிற மாதிரி காட்சிகளின் போது காட்சி முடிந்தவுடன் எழுந்து போகச் சொல்லிவிடுவார்களா....இல்லை கூட குறைய கேட்டுப் பரிமாறி வயிறு முட்ட சாப்பாடு போடுவார்களா?
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.