Tuesday, October 04, 2005
காயமே இது...
காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா...
படத்திலிருப்பவர் யாரென்று தெரிகிறதா? இல்லையென்றால்..இவர் தான் நாங்கள் ஜொள்ளுவிட்ட காலங்களில் எங்களுக்கு எமனாக வந்து எம்குலப் பெண்களின் கனவைத் திருடியவர்.
எங்களைப் பற்றி கனவு காணாமல் அரவிந்த் சாமியை கனவு கண்ட எங்குலப் பெண்களே...(நீங்களெல்லாம் அனேகமாக இப்போது கல்யாணமாகி குழந்தைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்) கானுங்கள் உங்கள் கனவு நாயகனை.
(இதுக்குத் தான் நான் என்னை வெறும் கமலஹாசன் என்று சொல்லிக்கொள்வது கிடையாது .."உன்னால் முடியும் தம்பி" கமலஹாசன் என்று சொல்லிக்கொண்டால் எவ்வளவு சேஃப் பாருங்கள்)
என்னை மாதிரி ஆண்களுக்கு வயற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கும். ஆனால் எங்குலப் பெண்கள் அனேகமாக பொங்கி எழந்தாலும் எழலாம்...அதனால் வுடு ஜூட்.
பி.கு - சக்ரா இந்தப் படத்தை அனுப்பியபோது அரவிந்த் சாமியைப் பார்க்கவேஇல்லை. சொன்ன அப்புறம் தான் தெரிந்தது. ஆமா ஒரத்தில சித்திக்கு அடுத்தாப்புல இருக்கும் குட்டி யாருப்பா? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்யா கேட்கிறேன் மத்தபடி ஒன்னுமில்லை)
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.